ஒரிசா கிறிஸ்தவர்களுக்காக மிலானில் செப்டம்பர் 5 பொது செபமும் உண்ணா நோன்பும் அனுசரிக்கப்படுகின்றது
ஆகஸ்ட் 30 துன்புறும் ஒரிசா கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக
இத்தாலியின் மிலான் நகரில் செப்டம்பர் 5ம் தேதி பொது செபமும் உண்ணா நோன்பும் அனுசரிப்பதற்குத்
திட்டமிட்டுள்ளது பிமே மறைபோதக சபை.
அருளாளர் அன்னை தெரேசாவின் விழா நாளான செப்டம்பர்
5ம் தேதி இச்செபத்தை நடத்த முடிவு செய்துள்ள அச்சபை, இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால்
வர்க்கே விதயாத்திலுக்கு ஆறுதல் கடிதத்தையும் அனுப்பியுள்ளது.
அன்று இத்தாலிய
அரசியல்வாதிகள் சில பரிந்துரைகளை முன்வைக்கவும் தீர்மானித்துள்ளனர்.